Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேலப்பட்டமுடையார்புரத்தில் இல்லம் தேடி கல்வி மைய 2ஆம் ஆண்டு தொடக்க விழா

பிப்ரவரி 13, 2023 07:42

பாவூர்சத்திரம் : கீழப்பாவூர் பேரூராட்சியில் இல்லம் தேடி கல்வி மைய 2ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இல்லம் தேடி கல்வி மையம் ஓராண்டு நிறைவு விழா மற்றும் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கீழப்பாவூர் பேரூராட்சிக்குள்பட்ட மேலப்பட்டமுடையார்புரம் றி.டி.றி.ஏ. நடுநிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட்சன் பிரட்ரிக்ராஜா வரவேற்றார்.  வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின், ஜெயபிரதாப்சிங், பெற்றோர்கள் அழகேசன், சுடர்ராஜன், ராமகிருஷ்ணன், யோவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருமண்டல பெருமன்ற உறுப்பினர் தங்கஜெயம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை  தன்னார்வலர் ராஜஸ்வீட்லின் செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்